இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்புவுக்கு கண்டனங்கள் வலுத்தது. இந்த நிலையில்தான், “சேரி மொழி” என்பதற்கு குஷ்பு புதிய விளக்கத்தை அறிவித்திருக்கிறார்.
அதில், “எனது ட்வீட்டில் நான் பயன்படுத்திய வார்த்தைக்குக் கொந்தளிப்பவர்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. பெண்களின் மீது அநாகரீகங்கள் நடந்தபோது இதே வாய்கள் தான் மௌனித்திருந்தது. எனவே, எனது வார்த்தை பிரயோகம் குறித்துப் படித்தும் படிப்பறிவில்லாதவர்களுக்குச் சொல்லித்தர விரும்புகிறேன். எனது பதிவில் கேலிக்காக ‘சேரி’ என்ற பிரஞ்சு மொழி வார்த்தையைப் பயன்படுத்தினேன். சேரி என்றால் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்படும் ஒரு வார்த்தை. என் அம்மா எனக்கு மரியாதை குறித்துக் கற்றுத்தந்திருக்கிறார். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் இருப்பவள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com