ஜாதகம் பார்க்கும் AI தொழில்நுட்பம்.. உங்க ராசிக்கு பலன் என்ன? எப்படி பயன்படுத்துவது?

நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதுவும் செயற்கை நுண்ணறிவின் வருகை எல்லா துறைகளையும் புரட்டிப் போட்டுள்ளது. மருத்துவம், மென்பொருள், மொழிபெயர்ப்பு, உள்ளடக்கம் என அனைத்திலும் தன் கைவரிசையை காண்பித்துவிட்டு தற்போது ஜோதிடம் பக்கம் வந்துள்ளது.

ஜோதிடவியலில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளது. தற்போது புதிய வரவாக குண்ட்லி ஜிபிடி (Kundli GPT AI) என்ற சாட்பாட் அறிமுகமாகியுள்ளது. இதனிடம் ஒருவரின் ஜாதகத்தை காண்பித்தால் போதும். அந்த ஜாதகத்தின் கிரக நிலைகளின் அடிப்படையில், அவருக்கு தேவையான அத்தனை ஜோதிடவியல் கணிப்புகளையும் சரியாக கொடுக்கிறது.

“எதிர்காலத்தில் உங்கள் தொழில் எப்படியிருக்கும், வேலையில் முன்னேற்றம் ஏற்படுமா போன்ற விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்களின் கிரக நிலைகளின் அடிப்படையில் உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்தும், உங்களுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்கள், சவால்கள் குறித்தும் எங்களுடைய சாட்பாட் பதில்கள் அளிக்கும். எப்போது திருமணம் நடக்கும், குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கும் என தெரிந்துகொள்ள ஆசைபட்டால், அதற்கும் எங்கள் சாட்பாட்டில் பதில் கிடைக்கும். உங்களுக்கு ஏற்படவுள்ள தடைகளை எப்படி கடந்து செல்வது என அரிவுரைகளையும் எங்களுடைய சாட்பாட் வழங்கும்” என குண்ட்லி ஜிபிடி AI இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் எதிர்மறையாக செல்வாக்கு செலுத்தும் விஷயங்களை இவை அடையாளம் கண்டுகொண்டு, அதற்கான பரிகாரங்களை பரிந்துரைக்கும். மேலும், உங்களின் கிரக நிலைகளை பொறுத்து எதிர்காலத்தில் உங்களுக்கு வர வாய்ப்புள்ள உடல்நல பிரச்னைகள் குறித்தும் நிதி சம்மந்தமான அறிவுரைகளையும் இது வழங்குகிறது. இவை கூறும் பதில்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது.

குண்ட்லி ஜிபிடி (Kundli GPT AI) சாட்பாட் தற்போது வரை சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், எந்தவொரு வர்த்தக பயன்பாட்டிற்கும் இதை உபயோகப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்-ஆன குண்ட்லி ஜிபிடியை எப்படி பயன்படுத்துவது?

குண்ட்லி ஜிபிடி சாட்பாட்டை பயன்படுத்த வேண்டுமென்றால், முதலில் அதற்குரிய இணையதளத்திற்குச் சென்று, உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை பதிய வேண்டும். சிறப்பாக கணிக்க வேண்டுமென்றால், இருப்பிடத்தை அனுகுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

இறுதியில், “சப்மிட்” பட்டனை அழுத்தினால், உங்களுக்கான தனிப்பட்ட ஜோதிட கணிப்பு உடனடியாக கிடைக்கும்

இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான இன்னொரு செய்தியும் பலரது ஆர்வத்தை தூண்டியுள்ளது. அது என்னவென்றால், “ஆப்பிள் ஜிபிடி” (Apple GPT) என்ற பெயரில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாட்பாட் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். மக்களிடம் பிரபலமாக இருக்கும் OpenAI நிறுவனத்தின் சாட்ஜிபிடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் பார்ட் (Bard) ஆகியவற்றுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் சாட்பாட் கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Also Read : நச்சுனு கேமரா கிளாரிட்டி.. ரூ.10,000க்கு கிடைக்கும் சிறந்த செல்போன்கள்.. இதோ லிஸ்ட்!

2024-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மிகப்பெரிய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இதுகுறித்து எந்த உறுதியான திட்டங்களும் வகுக்கப்படவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் ஜான் ஜினென்ட்ரியா மற்றும் தலைமை மென்பொருள் பொறியாளர் க்ரேக் ஃபெட்ரிகி ஆகியோர் இந்த புது முயற்சிகளுக்கு தலைமை ஏற்றுள்ளார்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.news18.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *