இந்த நிலையில் நேற்று ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்ற சமயத்தில், அடுத்த கமிட்டி கூடிய பின்பு அதில் முடிவு செய்யும்வரை ஆட்டோ ஓட்டக்கூடாது என பொறுப்பாளர்கள் கூறினர். வழக்கமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தால் ஒரு வாரமோ, சில நாள்களோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டக்கூடாது என கட்டுப்பாடு விதிப்பது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அடுத்த கமிட்டி எப்போது நடக்கும் எனவே தெரியாது. நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் நான் மட்டும்தான் கலந்துகொள்ளவில்லை. எனவேதான் இனி என்னை ஸ்டாண்டில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் என்னிடம் அப்படி கூறி உள்ளனர்.
கணவரின் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பத்தை நடத்த முடியாது என்பதால் ஆட்டோ ஓட்ட வந்துள்ளேன். ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு மருந்து வாங்கி கொடுத்துவருகிறேன். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தால், சுமை தூக்கும் தொழிலாளியான என் சகோதரனையும் விலக்கி வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. நான் ஆட்டோ ஓட்ட வழிவகை செய்துதரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது குறித்து முன்கூட்டியே ரஜனி தகவல் கூறவில்லை என சி.ஐ.டி.யு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சி.ஐ.டி.யு நிர்வாகிகள் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எதுவும் பேசவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com
