பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மர்ம

கேரளாவை ஆளும் சி.பி.எம் முதல்வர் பினரயி விஜயனின் மகள் மாசப்படி வாங்கிய விவகாரம் குறித்து முதலில் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரீஷ் பாபு. அங்கு அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரீஷ் பாபு. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அவர் திடீரென மரணமடைந்ததால், அவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.

பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில், மரணமடைந்த கிரீஷ் பாபுபினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில், மரணமடைந்த கிரீஷ் பாபு

பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில், மரணமடைந்த கிரீஷ் பாபு

பினராயி விஜயனின் மகள் மாசப்படி வாங்கியதாக கிரீஷ் பாபு தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. கிரீஷ் பாபு மரணம் அடைந்ததாக அவரின் வழக்கறிஞர் கோர்ட்டில் அறிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிக்கப்படும் என கோர்ட் அறிவித்தது.

இதற்கிடையே இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கிரீஷ் பாபு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக போலீஸார் அறிவித்திருக்கின்றனர். அவருக்கு ஏற்கெனவே மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால் ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக, அவரின் உறவினர்கள் தெரிவித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இன்று காக்கநாடு அத்தாணி மயானத்தில் கிரீஷ் பாபு உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *