பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் ஒன்றான சட்டக் கல்வியைப் பயில அனைத்து நாடுகளிலும் மாணவர்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. உலகின் தலைசிறந்த வழக்கறிஞராக வர, நீதிபதியாக வர, என மாணவர்கள் முட்டி முட்டி படித்துக் கொண்டிருக்க, சட்டக் கல்வியே பயிலாமல் கென்யாவில் ஓர் பிரபல `போலி வழக்கறிஞர்” 26 வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும் சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியிலும், ஆச்சrர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.


கென்யாவைச் சேர்ந்தவர் பிரையன் முவெண்டா (Brian Mwenda). கென்ய உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வலம் வந்த இவர், அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், சமரசத் தீர்வு மையம் என பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி, வாதாடி, 26 வழக்குகளில் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும், இவர் தற்போது எவ்வளவு வழக்குகள் நடத்தி வருகிறார் என்ற தெளிவான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில், இவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பொதுப் புகார்களின் அடிப்படையில், இவரது கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்த கென்யா லா சொசைட்டியின் (Law Society of Kenya ) நைரோபி கிளையின் `ரேபிட் ஆக்சன் டீம்’ ( Rapid Action Team of the Nairobi Branch) அதிர்ச்சிக்குள்ளாகியது.
நன்றி
Publisher: www.vikatan.com