நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கே.சி.ஆர் இறந்தால் பா.ஜ.க ரூ.5 லட்சமும், கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர் இறந்தால் அதை ரூ.10 லட்சமாகவும் உயர்த்துவோம். அவரின் மகள் கவிதா இறந்தால் ரூ.20 லட்சம் தருகிறோம். எப்படியும் கே.சி.ஆரின் காலம் முடிந்துவிட்டது. எனவே, இளைஞர்கள் இறந்தால் தொகையை அதிகப்படுத்தலாம்…” என முகம் சுளிக்கும்படி கூறினார். பா.ஜ.க தலைவரின் இந்தக் கருத்துக்கு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.


அதைத் தொடர்ந்து, இந்தக் கருத்துக்கு பதிலளித்த கே.சி.ஆர்-ன் மகளும், பி.ஆர்.எஸ் தலைவருமான கவிதா, வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அரவிந்த் தர்மபுரி எங்களுக்கு எதிராகக் கூறிய கருத்து துரதிஷ்டவசமானது, உங்கள் (மக்கள்) மகள்களுக்கு எதிராக அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்திருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்களா… நான் அரசியலில் இருக்கிறேன். கே.சி.ஆரின் மகன், மகள் என்பதற்காக இப்படிதான் எங்களிடம் பேச வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com