வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது மாவட்ட போலீஸார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இது குறித்து விசாரித்தால், “குற்றச்சாட்டுக்கு ஆளாகும் `சோலை’ புள்ளி, வேலூர் மாவட்ட சீனியர் அமைச்சருக்குப் படு நெருக்கம். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இவரின் இடத்திலிருந்துதான் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதலானது. இந்த வழக்கு தற்போது தீவிரமடைந்துவருவதால், ‘சோலை’ வாயைத் திறந்தால் நமக்கு டேஞ்சர் ஆகிவிடும் என்று அமைச்சர் தரப்பு அவரைக் கண்போலப் பாதுகாக்கிறது. சீனியர் அமைச்சர் தரப்பின் பயத்தை முதலீடாகவைத்தே, வெயில் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் தொடங்கி பஞ்சமி நிலம் வரை வளைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார் `சோலை’ புள்ளி’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
நன்றி
Publisher: www.vikatan.com