இந்நிலையில், மேற்கொண்டு நடந்வை பற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர்,
“எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் நிதி ஒதுக்கினார். இதனால், எங்களின் நீண்டநாள் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்று மகிழ்ந்துபோனோம். ஆனால், புதிய தார்ச்சலையை அமைக்கும் பணியினை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் அண்ணாதுரை, தார் சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டார். ஆனால், அதன்பிறகு சாலையை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவும், அவர் 10 நாள்களுக்கு முன்பு தரமற்ற சாலையினை அமைத்தார்.

ஆனால், அப்படி போடப்பட்ட புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள், தோசை கல்லில் இருந்து தோசையைப் பிரித்து எடுப்பது போல் ஏடு, ஏடாக கையோடு பிரிந்து வந்தது. அதோடு, இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லும்போது, தார் சாலை பெயர்ந்து பூமிக்குள் அமுங்கி அந்த இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. இப்படி, புதிய தார் சாலை முறையாக போடாததால், ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து இருந்தது. இதனால், அதிர்ச்சியான நாங்கள், ஒபந்ததாரரிடம் முறையிட்டும் அவர் தகுந்த பதிலை தரவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com
