கர்நாடக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிஹோலி, வங்கியில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் வந்த நிலையில், போலீஸார் தற்போது அவர் உட்பட மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். கர்நாடக மாநில கூட்டுறவு வங்கியின், பம்பா மகாகவி சாலை கிளையின் பொது மேலாளர் ராஜண்ணா அளித்த புகார் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.


ராஜண்ணா அளித்த புகாரின்படி, சௌபாக்ய லக்ஷ்மி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக ரமேஷ் ஜார்கிஹோலி இருந்த சமயத்தில், நிறுவன இயக்குநர்கள் வசந்த் வி பாட்டீல், ஷங்கர் ஆகியோருடன் சேர்ந்து, நிறுவன விரிவாக்கத்துக்காக ஜூலை 12 முதல் மார்ச் 31, 2017 வரையிலான காலகட்டத்தில் ரூ.232.88 கோடி கடனாகப் பெற்றிருக்கிறார். மேலும், கொடுக்கப்பட்ட கடன் முழுமையாக அடைக்கப்படும் வரை, நிறுவனத்தில் தாங்கள் வகிக்கும் பொறுப்பிலிருந்து மூவரும் விலகக் கூடாது என்று நிபந்தனையுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com