இப்படியிருக்க கடந்த சில நாள்களாகவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கேற்றவாறே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்திருந்தார், இந்த நிலையில், தற்போது பா.ஜ.க – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. மேலும், பா.ஜ.க கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு லோக் சபா தேர்தலில் நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.


பா.ஜ.க – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்கிறது என்பதை செய்தியாளர்களிடம் தெரிவித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “தேவகவுடா, நம் பிரதமரைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 4 இடங்கள் என்பதை அவர்கள் ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டார்கள். அவர்களைக் கூட்டணிக்கு வரவேற்கிறோம்” எனக் கூறினார்.
2019 தேர்தலில், தேவகவுடாவின் பேரன் மட்டுமே மதச்சாற்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற ஒரேயொரு வேட்பாளராக இருந்தபோதும், கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் அவரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
நன்றி
Publisher: www.vikatan.com