

இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “இன்று காலை செய்தித்தாள்களைப் படிக்கும் வரை இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. தெலங்கானா தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்ததால், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அடுத்த இரண்டு நாள்களுக்கும் தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில்தான் இருப்பேன்” என்றார்.


இருப்பினும் காங்கிரஸ் அமைச்சரவையின் இத்தகைய முடிவைச் சாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ அஸ்வத் நாராயண், “இது மிகவும் தீவிரமான வழக்கு. நீதிமன்றத்திலும் இது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, வழக்கை சி.பி.ஐ-யிடமிருந்து பறிக்க அவர்கள் (காங்கிரஸ்) திட்டமிட்டிருக்கின்றனர். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கறைபடியாதவர்கள்போல் நடந்துகொள்ளும் இவர்கள், எதற்காக இந்த விசாரணையை எதிர்க்கிறார்கள்… கறைபடியாதவர்களாக இருந்தால், சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com