இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாகக் கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித் ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.


அதேபோல மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சிதிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “நீங்கள் இந்தி மொழியைப் பேசுகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு இந்தி மொழி மட்டுமே தெரியும். அதற்காக இந்தி மொழி தெரியாத எங்களை இந்தி பேசச் சொல்கிறீர்களா… இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பதிலளித்திருக்கும் நடிகை கங்கனா ரணாவத், “அமித் ஷா குஜராத்தைச் சேர்ந்தவர், அவரது தாய் மொழி குஜராத்தி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com