அரசு பேருந்து மோதிய விபத்தில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மோதியதில் 4ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். கல்பாக்கம் அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்த சுஜாதா என்பவரின் மகன் ஷரவன். இவர் அணுசக்தி மத்திய பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சுதந்திர நாள் நிகழ்ச்சியையொட்டி சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவன் விழா முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அப்பகுதியில் வந்த சகமாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com