எங்கள் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும்தான் இதைப் பகிரங்கமாகப் பேசினோம். இந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசாங்கம் இருந்தது என்பதை அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு நம்பகமான காரணங்கள் இருக்கின்றன.


எனவே, இனி இது போன்ற சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில், இது குறித்து பகிரங்கமாகப் பேசினோம். அமெரிக்கா ஏற்கெனவே ஒரு கொலையைப் பற்றி விசாரிக்கும்போதுதான், அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரைக் கொலைசெய்வதற்கான முயற்சி தடுக்கப்பட்டது. அதனால்தான் அமெரிக்கா ஆதாரத்தை உடனே வெளியிட்டது. ஆனால், நமது விசாரணை முறை வேறு. எனவே, நமது விசாரணைப் புள்ளிகள் ஒன்றிணையும்போது, ஆதாரத்தை வழங்குவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com