இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள், வீரர்கள் டெல்லியில், கடந்த ஆண்டு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கிடையில் அவரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங், WFI-ன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால், பெரும் ஏமாற்றமடைந்த வீராங்கனைகள், வீரர்கள் மீண்டும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்துவருகின்றனர். மேலும், ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சாக்ஷி மாலிக், “மல்யுத்தத்தைவிட்டே போகிறேன்” என்று அறிவித்தார். இதற்கிடையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “இந்த நாட்டில் நீதியை எங்குப் பெறுவதென்றே தெரியவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com