தமிழ்நாட்டில் கூட கலைஞர் கருணாநிதி ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார். இவர்கள் யாரும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் எதிராக இருந்தது கிடையாது. அனைத்து மாநிலங்களிலும், மதம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் மக்களால் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. மக்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தான்… நாட்டை பாதுகாக்கவும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் மட்டும்தான் அரசை தேர்வு செய்கிறார்கள். அதை விட்டுவிட்டு ஒன்றிய அரசு மதம் மதம் என்று கூறி பிளவுபடுத்துவது மட்டுமின்றி, ஏமாற்றியும் வருகிறார்கள். இந்துக்கள் என்று பா.ஜ.க கூறுவதால், நூறு ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் இந்துக்களுக்கு மட்டும் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறதா?. கேஸ் சிலிண்டர் ஆயிரம் ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கு வழங்கப்படுகிறதா?. எந்தவித சலுகையும் அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை.


இந்தியாவில் சிறுபான்மையின ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து நிலைகளிலும் பா.ஜ.க அழுத்தம் தர வேண்டும் என செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்கப்படவில்லை. அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கும் அழைக்கப்படவில்லை. இந்தியாவின் முதல் குடிமகனாக உள்ள நாடாளுமன்றத்திற்கு தலைவராக உள்ள குடியரசுத் தலைவர் ஒரு இந்துவாக இருந்தும், ஏன் பா.ஜ.க புறக்கணிக்கிறது?. பாஜக இந்துகளுக்குக்கான அரசு என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொய். பா.ஜ.க தங்கள் அரசியல் லாபத்திற்காக, ஒரு குறிப்பிட்ட மத மக்களை பயன்படுத்தி வருகிறார்கள். இது நீண்ட காலம் நீடிக்காது. தேசத்தின் வளர்ச்சி மட்டுமே நமக்கு முக்கியம். மக்களின் மத நம்பிக்கைகளை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அரசியல் கட்சிகள் அதை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com