அவரும் வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பில் இந்தியா தலைமையிலான G20 மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு( 72) கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. ஜில் பைடன் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிபர் பைடனுக்கும் கோவிட் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தற்போது நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் G20 மாநாட்டில் கலந்துகொள்வாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜில் பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com