10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நெல்லையில் ஊர்க்காவல் படை வேலை!

திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 18 வயது முடிந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அரசு துறைகளில் பணிபுரிவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் ஊர்க் காவல்படை ஆளிநர்களுக்கு காவல்துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவைபுரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூபாய் 280/- மட்டுமே சன்மானமாக வழங்கப்படும். அதிகபட்சமாக மாதத்திற்கு 10 அழைப்பு பணிகள் மட்டும் தான்.

இப்பிரிவில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் (BIODATA) பயோடேட்டா கல்வி மற்றும் வயது சான்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவினையும் 27.09.2023 ஆம் தேதிக்குள் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களது அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Local-18

திருநெல்வேலி
திருநெல்வேலி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.news18.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *