1814ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜா ஸ்ரீகிருஷ்ணராஜ உடையார், தென்கலை பாரம்பரியம் என்பதால், கோயில் தெய்வத்திற்கும் கோபுரத்திற்கும் தென்கலை என்று பெயரிட வேண்டும் என்று ஆணையிட்டார். அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 1972ஆம் ஆண்டின் இறுதியில், கொல்கத்தா விஷ்ணு கோயில்கள் மறுசீரமைப்பு அறக்கட்டளை யோகநரசிம்ம மலையை புதுப்பிக்கும்போது, மைசூர் பரகால மடத்தின் செல்வாக்கின்கீழ் பாண்டவபூர் தாசில்தார் சின்ன கோபுரத்துக்கு ‘வடகலை’ என்று பெயரிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்.கிருஷ்ணய்யங்கார், அழகியமணவாளன் மற்றும் தென்கலைப் பாரம்பரிய ஆசிரியர்கள், சட்ட விரோதமான தாசில்தார் உத்தரவை ரத்து செய்து, ‘தென்கலை’ என்ற பெயரை 1973ல் சூட்டக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் சமரசம் செய்து கொள்ள கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com