“பரிசு வழங்குவதில் பாகுபாடு பார்க்கவில்லை, இங்கு எல்லோரும் ஒன்றுதான், அரசு அலுவலர்களும், ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் நன்றாக கவனித்துதான் பரிசு அறிவிக்கப்படுகிறது..” என்று அபிசித்தரின் குற்றச்சாட்டை அன்றைய தினமே மறுத்தார் அமைச்சர் பி.மூர்த்தி.


இந்த நிலையில்தான் கடந்த 24-ஆம் தேதி அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டதில் 10 மாடுகளை பிடித்த அபி சித்தர் முதல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டார்.
அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மகேந்திரா தார் ஜீப்பும், ஒரு லட்சம் ரூபாயும் கலெக்டர் சங்கீதா வழங்கினார். இதை பார்த்து மைதானத்தில் இருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அபி சித்தர், “முதல் பரிசு பெற்றது பெருமையாக இருக்கிறது. அலங்காநல்லூரில் முதல் பரிசு பெறுவேன் என நினைத்தேன், இப்போது கீழக்கரையில் பெற்றுள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
ஒரு போட்டியில் முதல் பரிசுக்கு புறக்கணிக்கப்பட்டதாக சொல்லி அமைச்சர் மீது குற்றம்சாட்டிய வீரர், மற்றொரு போட்டியில் முதல் பரிசு பெற்று அதே அமைச்சர் முன்னிலையில் பரிசு பெற்ற சம்பவம் மதுரையில் கவனம் ஈர்த்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com