

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக அரசிடம் நான் அளித்த மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “எந்த அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. எனவே, இந்த மனுமீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அரசுக்கு மனு அளித்திருந்தால், அது சம்பந்தமாக அரசை அணுகுங்கள்” என மனுதாரரை அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com