நீண்டகாலமாக காஸா பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் ராணுவம், 1993-ம் ஆண்டு பி.எல்.ஓ எனப்படும் பாலிஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு காஸாவிலிருந்து வெளியேறியது. அதையடுத்து, யாசர் அராஃபத் தலைமையில் பாலஸ்தீன தேசிய ஆணையம் காஸாவை மாகாண தலைமையகமாகத் தேர்வுசெய்தது. பின்னர், காஸாவில் குடியேறியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினர்.


இஸ்ரேல் வெளியேறியதைத் தொடர்ந்து, பாலஸ்தீன அமைப்பான ’ஃபடா’வுடன் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுவந்தது ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பு. பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு 2006-ல் நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் வெற்றிபெற்றது. தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில்தான் காஸா இருக்கிறது. ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருதுகின்றன.
இந்தச் சூழலில்தான், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையிருக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவருகிறது. தற்போதைய சண்டையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்திருக்கிறார்கள். காஸாவில் ஹமாஸ் படையினரின் மறைவிடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களில் தீவிரமாக இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது. இதனால், உயிரிழப்பு உள்ளிட்ட கடும் பாதிப்புகள் ஏற்படும் என்று பல நாடுகள் அச்சம் தெரிவித்திருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com