இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60 பேர் காயமடைந்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “காஸாப் பகுதி போர்க்களம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தெற்கு நோக்கி வெளியேறுமாறு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறது.


ஐ.நா சபையில் இஸ்ரேலுக்கு எதிரான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப் பிறகும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. இந்த தாக்குதலில், சர்வதேச போர் விதிமீறல் தொடர்வதாக ஐ.நா கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேலின் டெல் அவிவில் நெதன்யாகுவை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியதாகவும், அதற்கு இஸ்ரேலிய அதிபர் நெதன்யாகு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தப்பேச்சுக்கே வாய்ப்பில்லை என மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com