இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர்கள் துறை, யூதர்கள் மத்தியில் இருக்கும் மனித உரிமை அமைப்புகளையும், பாலஸ்தீனர்களைக் கொல்வதற்காக இயங்கும் யூத அடிப்படைவாத அமைப்புகளையும் கண்காணிக்கிறது. மூன்றாவதாக செக்யூரிட்டி பிரிவு ஒன்று இருக்கிறது. நாட்டின் முக்கியமான இடங்களையும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பாதுகாப்பது இந்தப் பிரிவின் வேலை.
ஷபாக்கின் தலைவரும் பிரதமர் தவிர யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஹமாஸ் அமைப்பின் வெடிகுண்டு நிபுணரான யாஹ்யா ஆயாஷ் என்பவரை ஷபாக் அமைப்பே கொன்றது.


ஆயாஷின் மாமாவை தங்கள் உளவாளியாக மாற்றி, அவர் மூலம் ஆயாஷ் செல்போனில் வெடிமருந்தைப் பொருத்தி வெடிக்கச் செய்து கொன்றார்கள். இப்படி ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் பலரைக் கொன்றிருக்கிறது ஷபாக். இந்த அமைப்பினரின் வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுகள் வீசும்போது, விமானத்தில் பக்கத்தில் அமர்ந்து இலக்கைக் காட்டுபவர்கள் இந்த அமைப்பினர்தான்.
இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்படும் பாலஸ்தீன அரசியல் கைதிகளை கடும் சித்திரவதைக்கு ஆளாக்குவது ஷபாக் அதிகாரிகள்தான். இதுதொடர்பாக பலமுறை நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளானாலும், அவர்களின் செயல்முறைகள் எதுவுமே மாறவில்லை. ஒரு நாற்காலியில் மல்லாந்து படுக்க வைத்து, உடலை வில் மாதிரி வளைக்கச் செய்து, கைகளையும் கால்களையும் நாற்காலியின் கால்களில் கட்டிப் போடுவது Shabach position எனப்படுகிறது. மரணவலியில் துடித்துக் கதறினாலும், பல மணி நேரம் இப்படியே படுக்கைவைத்து விசாரணை நடத்துவார்கள். அப்பாவிகள் பலர் இதுபோன்ற கொடூர விசாரணைகளைத் தாங்க முடியாமல் செத்துப் போயிருக்கிறார்கள்.
(நாளை பார்க்கலாம்…)
நன்றி
Publisher: www.vikatan.com