அவர்கள் மூன்று பேரும், இஸ்ரேலின் கிப்புட்ஸ் கஃபர் ஆசாவிலிருந்து கடத்தப்பட்ட யோதம் ஹைம், அலோன் ஷம்ரிஸ் மற்றும் கிப்புட்ஸ் நிர் ஆமிலிருந்து கடத்தப்பட்ட சமர் அல்-தலால்கா என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது ராணுவத்தின் தவறால் நடந்த கொலை. இஸ்ரேலிய வீரர்கள் அவர்களை எதிர்கொண்டபோது, விதிகளுக்கு எதிராக, அவர்கள் வெள்ளைக்கொடியை உயர்த்தியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் மூன்று பேரும் சட்டையின்றி இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது.

எனவே, காஸாவில் இருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இந்தத் தவற்றை மீண்டும் செய்ய வேண்டாம். காஸாவைச் சேர்ந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்தால், அவர்களைக் கண்டிப்பாகச் சுடக் கூடாது. இது தொடர்பாக விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து விளக்கமளித்த இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஜெனரல் ஹெர்சி ஹலேவி, “எங்களுடன் போராடுபவர்கள்கூட, அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, கைகளை உயர்த்தினால், நாங்கள் அவர்களைக் கைதுசெய்கிறோமே தவிர, அவர்களைச் சுட மாட்டோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
