Israel-Hamas: 7-வது நாளாகத் தொடரும் போர்; 3000-ஐ நெருங்கும்

இதனால், காஸா நகரம் முழுவதும் இருளில் மூழ்க, ஐ.நா அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric), “காஸாவில் மக்களின் இடம்பெயர்வு கடந்த 24 மணி நேரத்தில் 30 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அதோடு, ஐ.நா முகாம்களில் குடிநீர் மோட்டார்களை இயக்க போதிய மின்சார வசதி இல்லாததால், மக்களுக்கு வழங்கும் குடிநீர் தேவை கடுமையான நெருக்கடிக்குள்ளாகிவருகிறது. இன்னொருபக்கம், 6,00,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காஸாவில் கல்வி தடைப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இதுவரையில், காஸாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், ஐ.நா நடத்தும் 92 பள்ளிகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இந்தியா vs பாரதம் - ஐ.நாஇந்தியா vs பாரதம் - ஐ.நா

இந்தியா vs பாரதம் – ஐ.நா

இந்த நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகர செய்தியாக, காஸாவில் வசிக்கும் 50,000 கர்ப்பிணிகள் உணவு, குடிநீர், என அடிப்படை சுகாதார வசதிகளின்றி தவித்து வருவதாக ஐ.நா கவலை தெரிவித்திருக்கிறது. இவர்களில் சுமார் 5,500 கர்ப்பிணிகளுக்கு இந்த மாதத்தில் குழந்தை பிறக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்னொருபக்கம், வடக்கு காஸாவிலுள்ள மக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர வேண்டும் என்று ஐ.நா-வுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது, இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *