பூவுலகு நண்பர்கள் சுந்தராஜன், “சென்னை ஒரு தட்டையான நகரம். இங்கு வெறும் மழைநீர் வடிகால்கள் மட்டுமே கைகொடுக்காது. சென்னையில் ஓடும் மூன்று பிரதான ஆறுகளும், பல நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன. எந்தத் திட்டமிடலையும் சரியாகச் செய்யாமல், நகரைக் கண்மூடித்தனமாக விரிவாக்கம் செய்துகொண்டதே இதற்கு காரணம். நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் சென்னையின் மேற்குப் பக்கமிருக்கும் 4,000 நீர்நிலைகள்தான். அவைதான் சென்னைக்கு பெரும் வெள்ள ஆபத்துகள் வராமல் ஓரளவுக்குத் தடுத்துக்கொண்டிருக்கின்றன. அதில்தான் பரந்தூர் விமான நிலையத்தை அமைத்து, அடுத்த ஆப்புவைக்கத் தயாராகிறது மாநில அரசு. ‘காலநிலை தாங்குதிறன் நகரமாக’ சென்னையை மாற்றுவதற்கு, தலைநகரை மேலும் விரிவாக்கம் செய்யாமல் இருப்பதே தீர்வு” ” என்றார் விரக்தியுடன்.


பன்னீரின் ஆதரவாளர் மருது அழகுராஜோ, “அடுத்த கட்சி ஆட்சி நடக்கும் போது வாய்கிழிய பேசுவதும், தங்கள் ஆட்சி நடக்கும் போது “வரலாறு காணாத மழை” என்னும் துருப்பிடித்த வசனத்தை தூக்கிக் காட்டிக் கொண்டு தப்பிப் போக பார்க்கிறது திமுக. இந்த வார்த்தை ஜால வழக்கத்தில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு கரைந்து விட்டது. ஆனால், தலைநகர் சென்னை வாசிகளின் மழைக்கால துயரங்கள் சிந்துபாத் தொடராகவே நீண்டு கொண்டிருக்கிறது. அரசியலை தாண்டி மனசாட்சியோடு சில உண்மைகளை நாம் பேசியே ஆகவேண்டி இருக்கிறது.


வேலுமணி காலம் ஸ்மார்ட்சிட்டி என்றது. தற்போது கே.என் நேருவின் காலம் `நாலாயிரம் கோடி பேக்கேஜ்’ என்றது. ஆனாலும் சென்னை மக்களின் துயரங்கள் தொடர் கதையாகவே நீடிக்கிறது. நடுத்தர மக்களின் இ.எம்.ஐ பைக்குகளையும், கார்களையும் மழை வெள்ளம் அடித்துச் செல்வதை பார்க்கும் போது மனது பதை பதைக்கிறது. இப்படியான வருடம் தவறாத டிசம்பர் துக்கங்களுக்கு நிரந்தரமாய் தீர்வு காண வேண்டுமானால், மழை வெள்ளத்தின் போது மட்டும் ஆட்சியாளர்களை சபித்து விட்டு கடந்துபோகும் பிரசவ வைராக்கியத்திலிருந்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அப்படி செய்யவில்லையென்றால் கார்கள், பைக்குகளோடு வீடுகளும் மிதந்து போகும் காலம் வரலாம்.” என்றார் சூடாக.
என்று தீருமோ இந்த டிசம்பர் துக்கம்?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com