எனவே இங்குள்ள நிலைமையை எங்கள் தலைவர் டெல்லி எடுத்துச்சொன்னார். உங்கள் பணிகளை வழக்கம்போல பாருங்கள், கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் சி.டி.ரவி ட்வீட் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதிமுக இல்லாமல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அக்கட்சித் தலைவர்கள் நினைக்கிறார்கள் போல. அந்தக் காலமெல்லாம் மாறிவிட்டது. இப்போது எங்களுக்கும் கணிசமான வாக்கு வங்கி உருவாகிவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதை புரிய வைப்போம். இதை உணர்த்தும் விதமாகத்தான் சி.டி.ரவியின் ட்வீட் இருக்கிறது” என்கின்றனர்.
பாஜக சீனியர் நிர்வாகிகளிடம் இதுகுறித்து விசாரித்தோம். “பாஜக தலைமையில் போட்டியிட்டால்தான் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க முடியும். அதிமுக தலைமையை ஏற்று கூட்டணியில் நாங்களும் ஒரு அங்கமாக இருந்தால் எப்படி தாமரை மலரும்? எனவே 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அதை பிரதிபலிக்கும் விதமாக சி.டி.ரவி பதிவிட்டிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது?” என்கின்றனர். இருப்பினும் கூட்டணி முறிவு முறிவுதான் என்பதை உணர்த்துகிறதா சி.டி.ரவியின் பதிவு என்ற குழப்பத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com