நெல்லையில் இப்படி ஒரு கொடூர சம்பவமா..? பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்குதல்..!!

நெல்லையில் இப்படி ஒரு கொடூர சம்பவமா..? பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்குதல்..!!

நெல்லை மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (21), மாரியப்பன் (19) ஆகிய இருவரும் கூலி தொழிலாளர்கள். இருவரும் கடந்த 30ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பல் ஒன்று குடிபோதையில் அவர்களை வழிமறித்து தாக்கியுள்ளது.

மேலும், அவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும், கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி அவர்கள் இருவர் மீதும் சிறுநீர் கழித்துள்ளது அந்தக் கும்பல். இருவரையும் இரவு வரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி, 2 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு துரத்தி விட்டுள்ளது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள் இருவரும், நடந்தது குறித்து, உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (25), திருமலை கொழுந்துபுரத்தைச் சேர்ந்த நல்லமுத்து (21), ராமர் (22), சிவா (22), லட்சுமணன் (20) உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *