இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி என்று கூறும் அரசியல் பார்வையாளர்கள், இந்தக் கைது நடவடிக்கையால் சந்திரபாபு நாயுடு மீது மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


ஜெகன்மோகன் ரெட்டி மீதே ஏராளமான முறைகேடு வழக்குகள் இருக்கின்றன. ஆனால், மத்திய அரசுக்கு அவர் ஆதரவு அளித்துவருவதால், சி.பி.ஐ-யோ, அமலாக்கத்துறையோ, அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான கைது நடவடிக்கை குறித்து பா.ஜ.க கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல சம்பவங்கள் அரங்கேறலாம் என்கிறார்கள் விவரமறிந்த சிலர்!
நன்றி
Publisher: www.vikatan.com