இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்ற பதவி வெறிதான் நிதிஷ் குமார் பேச்சை பொறுத்துக் கொள்ள செய்கிறது. நாளை அவர்கள் அணி ஆட்சிக்கு வந்து இந்தி திணித்தால்கூட இப்படியே மெளனமாகத்தான் இருப்பார் ஸ்டாலின்” என்றார் கொதிப்புடன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “முதலில் `இந்தியா’ கூட்டணி அந்த கூட்டத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. அதுகுறித்த காணொளியோ, பதிவுகளோ இல்லை. இந்நிலையில் அதுகுறித்து எப்படி பேசுவது?. இதன்பின்னே பா.ஜ.க வழக்கம்போல் கையாளும் சித்தரிப்பு அரசியல் இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. தி.மு.க-வை பொறுத்தவரை எதற்காகவும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத ஒர் இயக்கம். இந்தி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம். நம்மீது இந்தியை திணித்து கொண்டிருக்கும் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கிறோம். வரும்காலத்தில் யார் திணித்தாலும் எதிர்ப்போம். மற்றபடி மேலும் பா.ஜ.க கருத்துருவாக்கம் செய்யும் அனைத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது எங்கள் வேலையல்ல. அப்படி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியிருந்தால்கூட நடைமுறையில் அது நமக்கென்ன பாதிப்பை தரப்போகிறது..?” என்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com