கனடாவில் இந்தியர்களுக்கு அச்சுறுத்தலா?! – மத்திய அரசின்

மேலும், ‘கனடாவில் நிலவிவரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளுக்கும் வன்முறை நிகழ்வதற்கு சாத்தியமுள்ள பகுதிகளுக்கும் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. தற்போது, கனடாவில் சுமார் 230,000 இந்திய மாணவர்களும், சுமார் 700,000 வெளிநாடு வாழ் இந்தியர்களும் கனடாவில் வசிப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

’அச்சுறுத்தல் காரணமாக, விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது’ என்றும் இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது. இந்த நிலையில், கனடாவில் பாதுகாப்பு குறித்து அங்கிருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பயண எச்சரிக்கையை கனடா நிராகரித்திருக்கிறது. ‘உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு கனடா தான்’ என்று அந்த நாடு தெரிவித்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தற்போது, கனடா மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு சரிந்திருக்கிறது. எனவே, கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு மோசமான சூழல் உருவானால், அது அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும், அதை உணர்ந்தே அவர் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *