கர்நாடகாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இருப்பினும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பொழுது வெற்றி பெறுவதற்கும், அதே நேரத்தில் திட்டம் தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகால அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். எனவே ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி இந்தியா கூட்டணி வெற்றி வியூகம் அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் மக்களை வாக்குகளாக மாற்றுவதில் பாஜகவின் திட்டம் வெற்றி பெறுகிறது. காங்கிரஸுக்கு மக்களிடத்தில் ஆதரவு இருந்தாலும் அதை வாக்காக மாற்றுவதில் தோல்வியடைந்து வருகிறார்கள். கீழ்மட்ட கட்டமைப்பு காங்கிரஸிடம் சரியாக இல்லை. மேலும் மூன்று மாநிலங்களில் அவர்கள் தோல்வியடைந்ததற்கு, உட்கட்சி மோதலும் மிக முக்கிய காரணம். இதுபோன்ற விஷயங்களை இரும்புக்கரம் கொண்டு, மேலிடம் அடக்க வேண்டும். ஆனால் அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். தென் மாநிலங்கள் அமித்ஷாவின் திட்டம் உடனடியாக எடுபடாது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, தெலங்கானாவில் அவரது `மிஷன் சவுத்’ தோல்விதான். ஆந்திராவில் வேண்டுமானால் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கலாம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
