சுவாரஸ்ய சம்பவம் : திருட சென்ற இடத்தில் தூங்கியதால் பிடிப்பட்ட திருடன்..!

Interesting incident Thief caught sleeping at the place he went to steal

இன்றைய காலக்கட்டத்தில் திருடர்களுக்கு பயந்து டிஜிட்டல் கதவுகள் மற்றும் டிஜிட்டல் பீரோக்களை வடிவமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற டிஜிட்டல் கதவுகளையே ஈஸியாக திருந்துவிடுகின்றன திருடர்கள். இதுபோன்று திருட செல்லும் திருடர்கள் சில சிரிப்பூட்டும் காட்சிகளை செய்திருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதில் ஒன்றுதான் திருட போன இடத்தில் காசு, நகை போன்ற எந்த பொருளும் இல்லாததால் அந்த திருடர்கள் திருட சென்ற வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சுவாரஸ்ய செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

Also Read > இந்திய கடற்படையில் 254 காலியிடங்கள் அறிவிப்பு

அதேபோல், அரியானா மாநிலத்திலும் ஒரு சிறப்பான சம்பவம் ஒன்று நடத்துள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த ரவி என்ற நபர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது ஈகோ மாடல் காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலையில் தூங்கி எழுந்து காரை சுத்தம் செய்ய சென்று பார்த்த ரவிக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. காரின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே ஒரு நபர் தூங்கி கொண்டிருந்தார்.

இதனை அறிந்த ரவி உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் காரை திருட வந்ததாகவும் போதையில் உள்ளே உறங்கி விட்டதாகவும் அவரிடம் இருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *