நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எழுப்பப்பட்ட கோஷம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சூழலில், சென்னையில் பாகிஸ்தான் விளையாடிய இந்தப் போட்டி, அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்துக்குள் இந்திய தேசியக்கொடி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இருந்தபோதிலும், காவல்துறை தரப்பில் தேசியக்கொடியை எடுத்துச் செல்ல எந்த தடையும் கிடையாது என்று தகவல் தெரிவித்திருக்கிறார்கள். மதியம், ரசிகர்கள் மைதானத்துக்குள், இந்திய தேசியக்கொடிகளுடன் சென்றனர். அப்போது, அங்குப் பணியிலிருந்த எஸ்.ஐ ஒருவர், அவர்களிடமிருந்து தேசியக்கொடியைப் பறிமுதல் செய்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com
