ஆனால், கட்சியில் சேர்ந்த ஒன்பதே நாள்களில், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. நேற்று முன்தினம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்திருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” என அம்பத்தி ராயுடு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்து தான் ஏன் விலகினேன் என்று அம்பத்தி ராயுடு விளக்கமளித்திருக்கிறார்.
இதுகுறித்து, அம்பத்தி ராயுடு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “துபாயில், ஜனவரி 20-ம் தேதி முதல் நடைபெறவிருக்கும் ILt20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை நான் பிரதிநிதித்துவப்படுத்தவிருக்கிறேன். எனவே, தொழில்முறை விளையாட்டை விளையாடும்போது அரசியல் ரீதியில் நான் தொடர்பில்லாதவராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com