ராஜபாளையம் டு அமெரிக்கா; US அதிபர் தேர்தலில் கவனம் ஈர்க்கும்

2024- ம் ஆண்டு உலக நாடுகளின் மத்தியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகப்போவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்குக் காரணம், அமெரிக்காவில் அதிபர் தேர்தலும், இந்தியாவில் பொதுத்தேர்தலும் நடக்கவிருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் யார் போட்டியிடுகிறார்கள் என்று ஒரு புறம் அலசினாலும், அமெரிக்காவில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள், குறிப்பாக எத்தனை இந்தியர்கள் போட்டியிடுகிறார்கள் என்று உலக நாடுகள் உற்றுகவனித்து வருகின்றன. இதுவரை 4 இந்தியர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. நிக்கி ஹாலே, ஹிர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி, சிவா அய்யாதுரை ஆகியோர் தேர்தலில் பங்கேற்கவுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடப் போவதாக இறுதியாக அறிவித்த சிவா அய்யாதுரை யார்?

தமிழ்நாட்டிலுள்ள ராஜபாளையம் மாவட்டம், முகவூரில் பிறந்த இவர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, மும்பையில் சிறிது காலம் தங்கியிருந்தார். பின்னர் சிவா அய்யாதுரையின் குடும்பம், ஏழு வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. அமெரிக்காவிலுள்ள M.I.T பல்கலைக்கழகத்தில் தனது இளநிலை பட்டத்தைப் பெற்றார் சிவா அய்யாதுரை.

வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

1970-களில் பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர், செவிலியர் போன்ற பணிகள் மட்டுமே மேற்கொண்டனர். நியூஜெர்சியில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பணியாளரின் மேஜையில் ஏராளமான ஆவணங்களும், காகிதங்களும் குவிந்திருந்தன. இதுவே, சிவா அய்யாதுரைக்கு ஒரு சவாலாகக் கொடுக்கப்பட்டது. அதாவது காகிதங்களில் இருக்கும் செய்திகள் மற்றும் விவரங்களை, மின்னணு அமைப்பில் மாற்ற வேண்டும். இதுதான் இவர் இ-மெயில் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையாக அமைந்தது. பின்னர், 1982- ல் இ-மெயில் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையை இவர் பெற்றார். 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *