பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ்மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாகப் பாலஸ்தீனத்தின் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். கூடவே, இஸ்ரேலுக்கு அமெரிக்கா போர் ஆயுத உதவிகளையும் செய்துவருகிறது. அதேமயம், போர் தொடங்கிய அடுத்த நாளே, பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பக்கம் நிற்பதாக இந்தியப் பிரதமர் மோடி, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தெரிவித்தார். அதோடு, ஹமாஸின் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என இந்தியா கண்டனம் தெரிவித்தது.


சுமார், இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் இந்த பேரில், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என ஹமாஸ் குழுவால் 1,400 இஸ்ரேலியர்களும், இஸ்ரேலால் 3,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்ளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் முக்கியமாக, காஸாவிலுள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 500 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். `இது இஸ்ரேலின் தாக்குதல்” என ஹமாஸ் கூற, மருத்துவமனைமீது ஹமாஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன’ என இஸ்ரேல் கூறிவருகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com