

இந்த நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது எனவும், இந்தியா சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நாடு எனவும் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் இந்தியாமீது அபாண்டமாக பழி சுமத்தும் கனடா, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இதற்கிடையில், இந்தியத் தூதரகத்தின் அதிகாரி பவன்குமார் ராய் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற கனடாவின் பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்ட சம்பவம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பதிலடியாக, டெல்லியிலுள்ள கனடா நாட்டின் முக்கிய அதிகாரியான ஒலிவியர் சில்வர்ஸ்டரை ஐந்து நாள்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல கனடா தூதரகத்திலுள்ள அதிகாரி கேமரூன் மேக்கேவையும் வெளியேறுமாறு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக அவரை நேரில் அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதையடுத்து, கேமரூன் மேக்கேவ் கோபத்துடன் வெளியேறி சென்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com