இந்த ஆய்வில், 90% பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், 10% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு, கேட்கப்பட்ட 72 கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர்.
அதனடிப்படையில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியத் தீண்டாமை நிலவுவது கண்டறியப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றை பட்டியலிடுகிறோம்.
* 38 பள்ளிகளில் மாணவர்கள் சாதி பெருமை பேசுகிறார்கள்.
* 33 பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர், கைகளில் கயிறு, செயின், பொட்டு, கடுக்கன் அணிந்து வருகை புரிகின்றனர்.
* 23 பள்ளிகளில் மாணவர்கள் சாதி உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.


*19 பள்ளிகளில் குடிநீர் அருந்த வெவ்வேறு டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* 15 பள்ளிகளில் கழிவறையை சுத்தம் செய்யும் வேலைகளில் பட்டியலின மாணவர்களை ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
* 12 பள்ளிகளில் விளையாட அனுமதிக்கும் நேரங்களில் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறது.
* 6 பள்ளிகளில் வரிசையில் நிற்பதில் மாணவர்களிடையே சாதியப் பாகுபாடு இருக்கிறது.
* 4 பள்ளிகளில் மாணவர்கள் சாதிவாரியாகப் பிரிந்து அமர்ந்து உணவு உணவருந்துகிறார்கள்.


* 3 பள்ளிகளில் பட்டியலின மாணவர்கள் ஏதேனும் தவறிழைத்தால் கூடுதல் தண்டனை வழங்கப்படுகிறது.
* ஒரு பள்ளியில் பட்டியலின மாணவர்களை தொடக்கூடாது எனக் கருதும் மாணவர்கள் இருக்கின்றனர்.
* மற்றொரு பள்ளியில் பட்டியலின மாணவர் முதல் மதிப்பெண் எடுத்ததால் பாராட்டு விழாவையே ரத்து செய்த கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.
*மேலும், 156 பள்ளிகளில் ஏதாவது ஒரு வகையில் பட்டியலின மாணவர்கள்மீது சாதியப் பாகுபாடு திணிக்கப்பட்டுவருகிறது. மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்குள்ளாகவும் சாதியத் தீண்டாமை நிலவுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com