தமிழ்நாட்டில் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!! எங்கெங்கு தெரியுமா..?

தமிழ்நாட்டில் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!! எங்கெங்கு தெரியுமா..?

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வருமான வரித்துறை அவ்வபோது சோதனை நடத்தி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு படூர் பகுதி, சென்னை எம்ஜிஆர் நகர் சப்தகிரி காலனியில் உள்ள தனியார் நிறுவனம், சென்னை தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள BHANDARi நிறுவனத்தில் போன்றவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், நாவலூர், நீலாங்கரை, எண்ணூர், ஓ.எம்.ஆர். உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *