இதற்கிடையே பிலிப்பைன்ஸின், போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் (OTS) கடந்த செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பக்கத்தில் சம்பவம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், “விமான நிலையத்தில் பயணியின் 300 டாலர் திருடுபோன விவகாரத்தில், பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல் கிடைத்ததும், அதனைச் சரிபார்க்கவும், அதன் உண்மை தன்மையை கண்டறியும் நோக்கில் விசாரணையைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் அடையாளம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், ஆதாரங்களைச் சேகரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது” குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி உட்பட நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com