அரசின் முக்கிய தகவல்! 1,000 ரூபாய் உரிமைத்தொகைக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்!

Important information of the government Lakhs of peoples have applied for a claim of 1 thousand rupees

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக அரசு சென்ற மாதம் தொடக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் குறித்த தகவல் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல்வர் தொடக்கிவைத்தார். இதன் மூலம் பெண் குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ1000 வழங்கப்படும். இதில் 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதில் 1.06 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை .gov.in என்ற இணையத்தில் அறியலாம். தற்போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழக அரசு ஒரு மாதகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 58 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமைத்தொகைக்கு தகுதியான காரணங்கள் உள்ளவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே தங்கள் அருகில் உள்ள அரசு இ – சேவை மையங்கள் அல்லது கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை மீண்டும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு லட்சம் விண்ணப்பங்கள் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் கால அவகாசம் உள்ளதால் இன்னும் பல விண்ணப்பங்கள் பெறப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனோடு மேல்முறையீடுக்கு விண்ணப்பித்தவர்களின் தகவல்களை கள ஆய்வு மூலம் சோதித்து முடிவு செய்யப்படும் என்று அரசு தரப்பு வாயிலாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Previous articleIIT மெட்ராஸில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு! வெயிட் பண்ணாம அப்ளை பண்ணுங்க!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *