தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபென் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாகவும், அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஹென்றி திபென் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவிக்கும் கருத்துக்களை பொறுத்து வழக்கில் சில அதிரடி நடவடிக்கைகள் நீதிமன்றத்தால் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று கனியாமூர் கலவரம், தஞ்சாவூர் டாஸ்மாக் பார் மரணம், அன்பு ஜோதி அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து விசாரணை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தலைமைச் செயலக உயர் அதிகாரிகளிடமிருந்து அந்தந்த மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஹசன் ஜின்னாவிடம் பேசினோம். “போலீஸ் மற்றும் சிபிசிஐடி விசாரணையை பொறுத்தவரை, அதில் நாங்கள் தலையிட முடியாது. வழக்கு விசாரணையை பொறுத்தவரை தங்களால் இயன்ற அளவுக்கு விரைவாகவே விசாரணையை துரிதப்படுத்தி வருகிறோம். அரசு தரப்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதை சுட்டிக்காட்டி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com