போதும், போதும் என்ற அளவிற்கு விடிய விடிய உல்லாசம்….! கள்ளக்காதல் ஜோடி எடுத்த அதிரடி முடிவு காலையில் காத்திருந்த அதிர்ச்சி….!

உறவினர்கள் மற்றும் கணவர் உள்ளிட்டோர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலர்கள் இருவரும், விடிய, விடிய உல்லாசமாக இருந்துவிட்டு அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வருபவர் நந்தகுமார் (32) திருமணமாகாத இவர், சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி ஜெயசித்ரா(47). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நந்தக்குமாருக்கும், ஜெயசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. ஆகவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஆனால், நாளடைவில் இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் ஜெயசித்ராவின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு தெரிய வந்தது. ஆகவே இந்த கள்ளக்காதலை கைவிடுமாறு ஜெயசித்ராவின் கணவரும், அவருடைய உறவினர்களும் ஜெயசித்ராவை கடுமையாக கண்டித்து உள்ளனர். மேலும், நந்தகுமார் குடும்பத்தினரும் இந்த கள்ளக்காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 22 ஆம் தேதி இரவு நந்தகுமார் ஜெயசித்ராவை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து, இரவு முழுவதும் திகட்ட, திகட்ட இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர், அதன் பிறகு, அதிகாலை வேளையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விடிந்து, வெகு நேரம் ஆன பின்னரும் நந்தகுமார் வீடு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக, எட்டிப் பார்த்தனர். அப்போது கள்ளகாதலர்கள் இருவரும், தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *