இந்துக்களின் முக்கிய கோவில்களாக கருதப்படும் கோவில்களில் ஒன்றுதான் பழனிமலை முருகன் கோவில். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக பழனி முருகன் கோயில் உள்ளது. இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை தருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் முருகர் பக்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக பழனிமலை கோவிலுக்கு வந்தார். அப்பொழுது அவர் சாமியை தரிசிக்கும்போளுது கருவறையை புகைப்படம் எடுத்தார். அந்த சமயத்தில் அவருக்கும் கோவிலில் பணியாற்றிய ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான ஆடியோவை சமூக வலைதளத்தில் அந்த நபர் வெளியிட்டார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Also Read : நீங்களும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்க போறீங்களா..? அப்ப இத உடனே படிச்சிட்டு போங்க…
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்து வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கோவிலுக்குள் செல்போன் மற்றும் கேமரா போன்ற கருவிகளை எடுத்து செல்ல கூடாது என்று உத்தரவிட்டது. இந்த புதிய உத்தரவானது அக்டோபர் 1 (நேற்று) முதல் அமலுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி செல்போனை கோயிலுக்குள் எடுத்துச் செல்லும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in