டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா பராமரிப்பில் ரூ.48 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது.

பின்னர் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு சி.பி.ஐ-க்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி நேற்றைய தினம் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கியது. சி.பி.ஐ இன்று தனது விசாரணையின் முதற்கட்ட அறிக்கையைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், `சி.பி.ஐ விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லையென்றால், பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா?’ என அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விட்டிருக்கிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “பிரதமர் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட விசாரணைகளை அவர் நடத்தியிருக்கிறார். என்மீது மட்டும் 33-க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். அனைத்தையுமே அவர் விசாரித்தார். ஆனால், ஒன்றுகூட வெளிவரவில்லை. டெல்லி முதல்வராக நான் பொறுப்பேற்ற நாள் முதல் இது போன்று என்னிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.

எனவே, இந்த விசாரணையில் சி.பி.ஐ எதையும் கண்டுபிடிக்காது. அவர்களின் முன்பு நான் அடிபணிய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஒருபோதும் நான் அடிபணிய மாட்டேன். எனவே, பிரதமர் மோடிக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விசாரணையில் நீங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லையென்றால், தவறான விசாரணை நடத்தியதற்காக மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com