இதன்காரணமாக, சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது சர்வதேச சட்ட மீறல் என்று குற்றம்சாட்டியது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் குறித்து, காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (சிஐஎஸ்) உச்சி மாநாட்டில் நேற்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், “காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மனித உயிரிழப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த மோதலுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை. ரஷ்யா இதனை முன்மொழிகிறது. மேலும், அந்த பேச்சுவார்த்தை, ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மிகைல் போக்டானோவ் (Mikhail Bogdanov), “ஹமாஸ் குழு விரும்பினால், நாங்கள் எப்போதும் அவர்களிடம் தொடர்பில் இருப்போம். மேலும், இந்தச் சூழ்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிப்பது, சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும்” என இன்று தெரிவித்திருக்கிறார். அடுத்த வாரம், கத்தாரில் ஹமாஸ் அதிகாரிகளைச் சந்திக்கும் மிகைல் போக்டானோவ், பிணைக் கைதிகளை விடுவிப்பது பற்றி அவர்களுடன் ஆலோசிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
