அதன்படி, அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா மற்றும் ஓ.பி.எஸ் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை தயாராகி வருகிறது. இதுகுறித்துதான் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த தருணத்தில்தான், 5 மாநில தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. இதில் ஒருசில மாநிலங்களை மட்டும்தான் பா.ஜ.க கைபற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதுகுறித்தும் பன்னீர் பேசினார். அதாவது, ‘பா.ஜ.க தோத்துட்டா, நமக்கு லாபம்தான். ஏன்னா ஐந்து மாநிலங்களில் பெரும்பான்மையாக பாஜக வந்துவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பக்கம் முழு கவனத்தை செலுத்த மாட்டார்கள்.


அதேநேரத்தில், ஒருசில மாநிலங்களை மட்டுமே பாஜக கைப்பற்றினால், தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்கள் நிச்சயம் வேண்டுமென்று பா.ஜ.க எண்ணும். அப்போது முழு கவனமும் தமிழ்நாடு பக்கமும் இருக்கும். அப்படி இருந்தால், வலுவான கூட்டணி வேண்டுமென்று பா.ஜ.க கணக்கு போடும். அதற்கு நாம் நிச்சயம் அவர்களுக்கு தேவை. அதன்படி, நம் அணி, அ.ம.மு.க உள்ளிட்ட பல கட்சிகளை ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைக்க பா.ஜ.க முயலும். அல்லது அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பணியை அவர்களே மேற்கொள்வார்கள். அதுதான் நமக்கு வேண்டும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்தார். ஓ.பி.எஸ் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்த நிர்வாகிகளும் அதை ஆமோதித்தனர். இப்படியாக ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது” என்றனர் விரிவாக. ஐந்து மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகளில் 4 மாநிலங்களின் முடிவு வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் பாஜகவின் வெற்றித் தோல்வியை முடிவு வைத்து பன்னீர் ஒரு கணக்கு போட்டு இருக்கிறார். இதில் எதில் சரியான விடை வரும்பென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com