இவ்வாறிருக்க, கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக, ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியிருக்கிறார்.
ஊடகத்திடம் இது பற்றி பேசிய பிரியங்கா கக்கர், “என்னைக் கேட்டால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி தரப்பில், அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


பிரதமரின் கல்வித் தகுதியாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி, நிறைய விஷயங்களில் கெஜ்ரிவால் தனது கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார். எங்கள் அரசு இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து, முதியோர்களுக்கு இலவச யாத்திரை சேவை ஆகியவற்றை வழங்குகிறது. கூடவே, உபரி பட்ஜெட்டையும் நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம். முக்கியமாக கெஜ்ரிவால், மக்கள் பிரச்னைகளை எழுப்பி பிரதமர் மோடிக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறார்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com